BREAKING NEWS

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேலவாளாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 42 வயதான ஜெகதீசன் என்பவர் மாணவியின் செல்போனிற்கு பாலியல் வன்மம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது கடந்த 2.11.2022 அன்று POCSO சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாலதி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி மாணவியின் தந்தையிடம் ரூபாய் 5000 லஞ்சமாக பணம் கேட்டுள்ளார். மேலும் லஞ்ச பணத்தை 13.12. 2022 காலை காவல் நிலையம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறியுள்ளார்.

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணவியின் தந்தை திருச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்து அளித்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் மாணவியின் தந்தை இன்ஸ்பெக்டர் மாலதி ரூ. 5000 லஞ்சமாக பெற்றபோது நேற்று (13.12.2022) காலை 10 மணி அளவில் கையும் களவுமாக பிடிபட்டார். இன்ஸ்பெக்டர் மாலதி மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மேலும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொருத்தியுள்ள சிசிடிவி் கேமரா சில மாதமாக செயல்படவில்லை என்பது் குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )