BREAKING NEWS

லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் நீர் மோர் பந்தலை பொதுமக்களுக்காக திறந்து வருகின்றனர்.

 

இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் வேலூர் அதிமுக புறநகர் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வேலூர் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி தண்ணீர், நீர், மோர் பனநுங்கு, கூழ், குளிர்பானம், இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன, ஒன்றிய துணைச் செயலாளர் பொன்முடி, இணைச் செயலாளர் மஞ்சுளா, பொருளாளர் முனிரத்தினம்,

மாவட்ட இணைச் செயலாளர் பாபு, அதிமுக பிரதிநிதிகள் அண்ணாதுரை, பெரியசாமி, செல்வி, யூனியன் கவுன்சிலர் ராஜா, ஒன்றிய பிற அணிச் செயலாளர்கள் தன்ராஜ், ராஜா, ஏழுமலை, தினேஷ், ஞானசேகரன், உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS