BREAKING NEWS

வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.

வடக்குமாங்குடியில் ஹத்தம் ஹந்தூரி சந்தனக்குடம் ஊர்வலம்.. ஏராளமானோர் பிரார்த்தனை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் ஹந்தூரி உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும்,

ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் பள்ளிவாசல் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று, பாத்திஹா ஓதி மீண்டும் பள்ளிவாசல் தர்காவை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், காயிதே மில்லத் படிப்பகம் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS