வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.

செய்தியாளர் மணிகண்டன்.
வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய காலணியில் வசித்து வருபவர் ஆண்ட்ரூஸ் கனகராஜ் (வயது 56) இவர் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 54) இவர் தளவாய்புரம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆன்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்க்கும் போது வீட்டில் உள்ள படுக்கை அறைகள் திறந்து பீரோ மற்றும் கபோர்டுகள் திறக்கபட்டு பீரோவில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை விசாரணையில் அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் வெள்ளை அடித்து விட்டு மாடி வழியாக கதவை உடைத்து வீட்டில் புகுந்து 1 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்.