வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் தெய்வபாண்டியன்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில்,.
TN – 31CC 8399 என்ற வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் ஏற்றிவந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேற்படி தனம் மளிகைக்கு வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.
CATEGORIES கடலூர்
TAGS குற்றம்தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைதடை செய்யப்பட்ட புகையிலைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்விருத்தாசலம் நகராட்சி