BREAKING NEWS

வாணியம்பாடியில் அரசு மருத்துவருக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க நன்றி..! தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம்.. 

வாணியம்பாடியில் அரசு மருத்துவருக்கு  மாலை அணிவித்து கண்ணீர் மல்க நன்றி..! தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம்.. 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காபட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வா இவர் ஓவிய கலைக்கூடம் நடத்தி வருகிறார்.

 

இவரது மனைவி சத்யகுமாரி இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. ஓவியத்தின் மீது ஆசை கொண்ட செல்வா தன் மகளுக்கு ஓவியா என பெயர் சூட்டி பாசமாக வளர்த்து வந்துள்ளார். 

 

ஓவியா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டின் இரண்டாவது மாடியில் துணி எடுப்பதற்காக சென்றபோது எதிர்பார விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். ஓவியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக அவர்களுடைய நண்பர்கள் ஓவியாவை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அப்பொழுது பலத்த காயம் ஏற்பட்டு முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு 13-க்கும் மேற்பட்ட இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

 

என்ன செய்வது என்று தெரியாத இருந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய டேவிட் என்ற மருத்துவர் உடனடியாக ஓவியாவிற்கு உரிய சிகிச்சை அளித்துள்ளார்.

 

 

அதன் அடிப்படையில் அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்தநிலையில் தற்போது இயல்பான நிலையில் தற்போது ஓடியாடி விளையாடிக் கொண்டிரு கொண்டிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்த தந்தை மகளை காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு குடும்பத்துடன் வந்து நேரில் நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு மாலை அணிவித்து சால்வை கொடுத்து கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

 

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பால், ரொட்டி மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து தன் குணமானதை மகிழ்ச்சியுடன் ஓவியா அவரிடம் வெளிப்படுத்தினார்.

 

தன் மகளைக் காப்பாற்றிய மருத்துவர்க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் காண்போரை நெகிழி வைத்தது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )