BREAKING NEWS

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாசம்(வயது 48) இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ரஞ்சித்,வெங்கடேசன், கவுதம் என்ற 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 1 ஆண்டாக சிறுநீரக நோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் இவரின் குடும்பத்தார் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள மலையடிவார குட்டை ஒன்றில் வேப்பமரத்தில் பிரகாசம் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS