BREAKING NEWS

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய
காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் குழு மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

 

அப்போது மாதகடப்பா மலைப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த
சுமார் 750 லிட்டர் கள்ள சாராய ஊறல், 35 லிட்டர் சாராயம் மற்றும் கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் மூல பொருட்கள் ஆகியவற்றை கண்டறிந்து அங்கேயே அழித்தனர்.மேலும் தப்பியோடிய கள்ள கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS