வாணியம்பாடி பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பூக்குட்டி மசூதி தெரு பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை எம்.எல். ஏ செந்தில் குமார் துவக்கி வைத்தார்.
அங்கு வந்த எம்.எல். ஏ வை வார்டு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிறகு துவா செய்து பணி துவங்கியது. உடன் அதிமுக நகர செயலாளர் சதாசிவம், நகர கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர் .
CATEGORIES திருப்பத்தூர்
TAGS கழிவுநீர் கால்வாய்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்பேவர்பிளாக் சாலைமுக்கிய செய்திகள்வாணியம்பாடி நகராட்சி