வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ.
மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத்.
இந்நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் உதயேந்திரம் பேரூராட்சி 10 வது வார்டு
திமுக உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜீ என்பவரிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் ஃபோன் செய்து தனக்கு சேர வேண்டிய மாமூலை கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி
மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகளே மணல் கொள்ளையர்களுடன் கைகோர்த்து லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை ஊக்குவிக்கும் சம்பவம் இனியும் தொடரக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.