வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வாரம் இருமுறை முட்டை மார்க்கெட் நடைமுறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முட்டை வியாபாரி சங்க நிர்வாகிகள் சுப்பையா, சண்முகவேல், முத்துக்குமார் (சங்கரன்கோவில்) பரந்தாமன் (ராஜபாளையம்)
ராமர், எகியா (புளியங்குடி) கண்ணன் (தென்காசி) ரபீக் (சுரண்டை) முருகேசன்
(கீழ சுரண்டை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி செய்தியாளரிடம் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் மேலாக முட்டைகள் விற்பனையாகிறது.
வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நாமக்கல்லில் இருந்து மொத்த முட்டை வியாபாரிகள் நேரடியாக தென் மாவட்டங்களில் முட்டைகளை விற்பனை செய்கிறார்கள்.
இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு தலையிட்டு எங்களுடைய பிரச்சனையை தீர்த்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தியாளர்களிடம் செல்லப்பாண்டி கூறினார்.