BREAKING NEWS

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு…

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு…

வாரிசு அரசியலையும் திமுகவையும் பிரிக்க முடியாது-
ஈரோடு தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான் திமுகவிற்கோ திருவோடுதான் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டம் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மகேஷ், முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில்:-

உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எடப்பாடி பழனிச்சாமி தான் கழகத்தின் பொதுச்செயலாளர் என தீர்ப்பு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

ஒரு தொண்டன் கூட முதல்வராக முடியும் என்றால் அது அதிமுக தான்

ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறும் ஆனால் தொண்டர்கள் காண கட்சி அதிமுக தான்

வாரிசு அரசிலும் என்ற பட்டிமன்றத்தில் என்ற தலைப்பில் பட்டிமன்றம் அமைக்கலாம் அந்த அளவுக்கு உள்ளது திமுக

ஈரோடு இடை தேர்தலில் முதலில் களம் இறங்கியது அதிமுக தான்

ஈரோட்டில் திமுக நின்றால் ஈரோடு எங்களுக்கு கிடைக்கும் திமுகவுக்கு திருவோடு தான் கிடைக்கும் இதனால் தான் ஈரோட்டை காங்கிரசுக்கு விட்டு கொடுத்தது திமுக
ஈரோடு வெற்றிக்கு பின்னர் அதிமுக தான் ஒரே கட்சி அது எடப்பாடி யார் தான் என காலம் வரும்

விரைவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேசினார்.

இந்த நிகழ்வின் முடிவில் திமுக கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு தலைமைக் கழகப் பேச்சாளர் சவுண்ட் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,வடக்கு மாவட்ட அவைத்தலைவர் என்.கே பெருமாள், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுசீலா தனஞ்செயன், ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், காந்தி என்ற காமாட்சி, அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,பழனி குமார்,முருகன், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS