BREAKING NEWS

வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, கல்லூரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்கள்.

 

 

உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நாநீலதாசன் வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஜி.கே. உலக பள்ளி நிர்வாகிகள் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS