BREAKING NEWS

வாழப்பாடி அருகே தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.

வாழப்பாடி அருகே தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் பங்கேற்பு.

 

 

வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் தமிழக அரசின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

 

 

  இதில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகள் உடன் விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இதில் தங்களுடைய கால்நடைகளுக்கான குடல் புழு நீக்குதல் ஆண்மை நீக்குதல் செயற்கை முறையில் கருவுட்டுதல் சினை பரிசோதனை சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை அளித்தல் கால்நடைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும் மேலும் சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

 

இதில் கால்நடை உதவி மருத்துவர் செல்வராஜ் மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன் கவுன்சிலர் முருகன் கோவிந்தன் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )