BREAKING NEWS

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.

வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ மானாமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர்கள். செல்வகுமார் மனோகரன் ராஜேஷ்குமார் இவர்களின் முன்னிலையிலும் மானாமதுரை தலைமை ஜீவா சகாயராஜ். எம்.ரிச்சர்டு தேவசகாயம், அ.பாண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.நாகராஜன் இவர்களின் முன்னிலையிலும் மானாமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

01.04.2003 க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் 18 மாதகால அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

 

 

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்பு விப்பு விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உடற்கல்வி இயக்குனர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதியை உடனடியாக களைய வேண்டும் என எண்ணற்ற கோரிக்கைகளை வைத்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி.ராஜா.

CATEGORIES
TAGS