BREAKING NEWS

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

விருத்தாச்சலதில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் மாற்று கட்சியிலிருந்து நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி அதன் தலைவர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களை சீமான் உறுப்பினர் அட்டைகள் வழங்கி வரவேற்றார்.

 

பின்புஉரையாற்றுகிற போது தற்போது தமிழ்நாட்டிற்க்கு 2 கோடி இந்திக்காரர்கள் வந்திருக்கிறார்கள் இன்னும் சிறிது காலம் சென்றால் அவர்கள் அதிகாரத்தில் அமரக்கூடிய அபாயம் உள்ளது, அவர்கள் இங்கே அரசியலை நிர்ணயிக்கும் நிலை ஏற்படும் எனவும் சாதி ரீதியாக பிரிந்து இருக்கிற நாம்சாதி மதம் இன வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த அபாயகரமான நிலையை தவிர்க்க முடியும் எனவும்,

 

நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் ஒவ்வொருபொங்கல் தோறும் ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கிலோ அரிசி 10 கிலோ சர்க்கரை அனைத்தும் உங்கள் வீடு தேடி வந்து கொடுக்கப்படும் எனவும், உரையாற்றினார் இதில் கடலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகிறபோது:-

என்.எல்.சி நிறுவனம்நிலம் கையாக படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக வீட்டிற்கு ஒருவருக்கே வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் அதற்குரிய இழப்பீட்டுத் தொகை தர வேண்டும் மேலும் தமிழர்களைத்தான் வேலையில் சேர்க்க வேண்டும்என்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் போராடி வருகின்றனர் நானும் போராட்டம் நடத்த இருக்கிறேன் எனவும்,

 

நம்முடைய நிலத்தில் நிலக்கரி எடுத்து அதன் மூலமாக மின்சாரம் தயாரித்து இந்தியா முழுவதும் தருகிற மத்திய அரசு நிலம் கொடுத்தவர்களுக்கு எந்தவித உரிமையும் தராமல் வேலை தராமல் உரிய இழப்பீடு தொகையின் தராமல் இருப்பதே மிகவும் கண்டிக்கத்தக்கது கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை அது அந்த மாநிலத்தின் உரிமை என்று சொல்கிறார்கள்.

 

அதுபோல் தமிழகத்தில் நெய்வேலியில் நம் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரி அதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மட்டும் பொது என்று சொல்கிறார்கள் என்.எல்சி தற்போதுவேலைக்கு எடுத்த299 பேரில்ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்பதை கண்டிக்கத்தக்கது, இது தமிழர்களை இளிச்சவாயர்களாக ஆக்குவதாக உள்ளது எனவும்,

 

பொங்கலுக்கு வருடா வருடம்நியாய விலை கடை மூலமாக கரும்பு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது இதனை நம்பி இந்த வருடமும் கொடுப்பார்கள் என்று கரும்பை விளை வித்து இருக்கிறார்கள்
விவசாயிகள்ஆனால் அரசே கரும்பு தரவில்லை என்று கூறுகிறது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் பொதுமக்களுக்கு கரும்பை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

 

மேலும் சென்ற வருடம் குஜராத்தில் இருந்து கரும்பு சர்க்கரை போன்ற பொருட்களை தமிழக அரசு வாங்கியது தவறான செயல் இங்கேயே அனைத்து பொருள்களும் இருக்கிறபோது எதற்காக வெளி மாநிலங்களில் அந்த பொருட்களை வாங்க வேண்டும் இது கண்டிக்கத்தக்கது எனவும்,

 

டெல்லியில்நடைபெற்ற காங்கிரஸின் ராகுல் காந்தியுடன்கமலஹாசன் ஒற்றுமைபேரணியில்கலந்து கொண்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அது அவருடைய சொந்த விருப்பம் எதிர்காலத்தில் அவர்கள் கூட்டணி அமைக்கலாம் எனவும்,

ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கின்ற ரயில்வேயில்உள்ள பணிகளுக்கு அந்தந்த மாநில பகுதியை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆனால் மத்திய அரசு இந்திக்காரர்களை தமிழகத்திலே பணியில் அமர்த்தி இருக்கிறது இது மிகவும் கண்டிக்கத் தக்கதே தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே ரயில்வே வேலைகளை தர வேண்டும் எனவும்,

பனை மரங்களை இரவோடு இரவாக வெட்டி வெளிமாநிலங்களுக்கு கடத்துகிற வேலையில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது எனவும்,

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் 7% கமிஷன் பெற்றனர் தற்போது திமுக ஆட்சியில் 16% இரண்டு மடங்கு கமிஷன் பெறுகிறார்கள் எனவும்
ஏற்கனவே ஆதார்அட்டையின் மூலம்பொதுமக்கள்மத்தியமாநில திட்டங்களில்பயன்பெற பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழக குடிமகன் என்பதற்க்கானஅடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டிருப்பது கமிஷன் பெறவேஎனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

CATEGORIES
TAGS