BREAKING NEWS

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

இதில் மணிமுத்தாறு நீர் பாசன தலைவர் தங்க. தனவேல் தலைமை தாங்கினார் நாகராஜன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பரந்தாமன், ஜெயராமன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கதிர்காமன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோகுல் கிறிஸ்டிபன், கவுன்சிலர்கள் சரவணன், பாக்யராஜ், முன்னாள் துணை ஒன்றிய பெருந்தலைவர் செல்வகுமார் மற்றும் விவசாயிகள் சிவசுப்பிரமணியன், சண்முகம், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

 

அப்போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முழு கரும்பு நிலுவைத் தொகையை 100% உடனே வழங்க கோரியும் வண்டி வாடகை பாக்கி உடனே வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )