விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் வெளியீடு மற்றும் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ், மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்பு.
கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவம் இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் கவனம் செலுத்தும் நிலையில் கிராமப்புறங்களில் நடைபெறும் முக்கிய தொழிலான விவசாயத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது.
நாளுக்கு நாள் விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் விவசாயம் அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.