வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகள் உடன்பாடு செய்து அறிவித்து விட்டது.
வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டன.
மார்ச் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.
சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இருந்தே வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்குவார்கள்.
ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் இன்று வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராத காரணத்தால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்சைகள் 11 பேர் உட்பட 26 பேர் படிவம் பெற்று சென்று உள்ளனர்.