BREAKING NEWS

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.

வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.

அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி..

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சில மாதங்களாகவே அதிகப்படியான குரங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

 

இவை அங்கு இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், வீடு, கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், மேலும் குழந்தைகளை மிரட்டி வருவதுமாக அட்டகாசத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

 

இதனை பொதுமக்கள் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதியிடம் கூறிவந்த நிலையில் அவர் மூலம் பல்வேறு அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுக்கவே இல்லை என கூறப்படுகிறது.

 

 

மேலும் நாளுக்கு நாள் குரங்கன் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் தாங்க முடியாத ஊராட்சிமன்ற தலைவர் வனத்துறை அதிகாரிகளிடம் சென்று குரங்க பிடிக்கும் கூண்டினை பெற்றுக்கொண்டு அப்பகுதி இளைஞர்களின் மூலம் சுமார் 25 குரங்ககள் பிடிக்கப்பட்டது.

 

இதனை அருகே இருந்த தீர்த்தம் வனப்பகுதியில் அதற்க்கு உண்டான உணவுப்பொருட்களுடன் சென்று பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். இந்த செயலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

CATEGORIES
TAGS