BREAKING NEWS

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பெருந்திரள் முறையீடு!

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 08.09..2025 மாலை 5.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.அர.சுப்புலட்சுமியிடம் பெருந்திரள் முறையீடாக கோரிக்கை மனு அளித்து பேசினர்.

ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன்,, ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன் ஆகியோர் கூட்டு தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.பாக்கியராஜ் முன்னிலையில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், தமிழ்நாடு வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.ராமன், உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஷாநவாஸ், ஆதிதிராவிடர் நலச் சங்க பொதுச்செயலாளர் துரை கருணாநிதி ஆகியோர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் வே.அர.சுப்புலட்சுமியிடம் பெருந்திரள் முறையீடாக கோரிக்கை மனு அளித்தனர்.


கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைப்பதாக ஆட்சியர் கூறினார்.
முன்னதாக ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார், மாநில துணை தலைவர் டி.ஜெயபிரகாஷ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், செயலாளர் தனசேகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் எஸ்.சபீதா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சீனிவாசன், லட்சுமிவெங்கடேஷ், மருந்தாளுநர் சங்க வேந்தன், ஊரக வளர்ச்சித்துறை பா.வேலு, சத்துணவு ஊழியர் சங்க கே.சுமதி ஆகியோர் உள்பட பலர் பேசினர்.

தேர்தல் கால வாக்குறுதியான பழைய பயனளிப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரளாக சென்று முறையீடு செய்வது என்ற மாநில முடிவில் அடிப்படையில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாலை வேலூர் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக அரசிடம் முறையீடு செய்தனர்.

கோரிக்கைகள்
1.பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
3. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
4.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.

கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

5. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

6. அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
7. 21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்
8. 2003 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
9. சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

CATEGORIES
TAGS