BREAKING NEWS

வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!

வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!

வேலூரில் பாகாயம் காவல் சரகம், தெற்கு காவல் சரகம், தாலுகா காவல் சரகம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் விபச்சார அழகிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு வீடுகளை வாடகை எடுத்து நூதன முறையில் விபச்சாரம் நடத்தி வந்தார்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு வாரி வழங்கிவிட்டு தானும் ஏகபோகமாக இருந்து வந்தார். அத்துடன் பலரிடம் பண மோசடி செய்வது, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டால் மிரட்டுவது என்று சில விரும்பத்தகாத செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக பொதுமக்கள் தரப்பிலும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கதை கதையாக புகார் கூறப்பட்டது.

ஆனாலும் காவல் நிலையங்களில் இவர் மாமூல் செலுத்துவதாகவும் இவரை யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாமல் செல்லப்பிள்ளை போல் விட்டு விட்டனர். இதனால் இவர் நன்கு வளர்ந்து விட்டார் என இவரின் நலம் விரும்பிகள் பலர் பல தகவல்கள் கூறுகின்றனர்

அத்துடன் தனக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இவர் தனது தொழிலை விரிவு படுத்தினார்.

அவ்வப்போது சில அரசியல்வாதிகளுக்கு விபச்சார அழகிகளையும் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் சரக டிஐஜி தேவராணியின் உத்தரவின் பேரில் விபச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் காவல்துறையில் உள்ள மனிதாபிமானம் மிக்க சில அதிகாரிகள் மட்டும் இந்த விபச்சாரத்தை அடித்து நொறுக்கினர்.

அப்பொழுதும் சில காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மாமூலை கிருஷ்ணமூர்த்தியிடம் வாங்கிக் கொண்டு அவருக்கு வாலாட்டி கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர் எவ்வளவு விரட்டப்பட்டாலும் வேலூரை விட்டுச் செல்லாமல் அங்கேயே தொடர்ந்து மீண்டும் மீண்டும் விபச்சாரத்தை இடம் மாற்றி மாற்றி நடத்திக் கொண்டு வந்தார்.

ஆனால் தற்போது கிடுக்கப் பிடி, கெடுபிடி அதிகமானதால் காவல்துறையினரை சமாளிக்க முடியாத கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் உள்ள தங்கும் விடுதிகளை குறி வைத்து தனது ஆட்டோவில் விபச்சார அழகிகளை வேலூரில் இருந்து அழைத்துக் கொண்டு கண்ணமங்கலத்துக்குச் சென்று அங்கு தனது தொழிலை நடத்த தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் தற்போது நிலைமை சரியில்லை வேலூருக்கு வராமல் பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்திலேயே உனது தொழிலை நடத்திக் கொள் என்று தகுந்த அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

என்று விசுவாசமுள்ள காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கையை காவல்துறையில் பணியாற்றும் மனிதாபிமானமுள்ள, மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் தகவல்களாக செய்தியாளர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டோவில் பயணிப்பது பெரும்பாலும் யாருமே பயணிகளே அல்ல, அனைவரும் விபச்சார அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால் இவரது ஆட்டோவை எப்பொழுதா வது நிறுத்தி சோதனை செய்தால் விபச்சார அழகிகள் இருப்பதை காண முடியும். அத்துடன் தற்போது கண்ணமங்கலத்துக்குச் சென்றால் இவர் பிடிபடுவது உறுதி என்கின்றனர் நன்கு விஷயம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

பூனைக்கு மணி கட்டுவது யார்? என்று ரீதியில் உள்ளது. காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கவனமாக கண்காணித்தால் அவர் சட்டத்தின் பிடியில் சிக்குவது உறுதி.

காவல்துறையில் உள்ள கண்ணியமிக்க அதிகாரிகள் இதை செய்வார்களா? என்பது போகப் போகத்தான் தெரிய வரும். வேலூர் சரக டிஐஜி தேவராணி போன்ற காவல்துறையில் நேர்மையும், மிடுக்கும், கண்ணியமிகு பணியாற்றுபவர்கள் இதை கட்டாயம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS