வேலூர் சத்துவாச்சாரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்ப

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பெங்களூரு& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதனையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதனை அடுத்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்தி சீர் செய்தனர் இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
CATEGORIES வேலூர்
TAGS தடுப்பில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையில் விபத்துமுக்கிய செய்திகள்வேன் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துவேலூர் மாவட்டம்