BREAKING NEWS

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

வேலூர் மாவட்டம்

வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார்.

 

வேலூரில் இன்று வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிதாக ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள பேரிக்காடுகள் சாலை பாதுகாப்பு கூம்புகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் காவல் நிலையங்களில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

 

பின்னர் டிஐஜி முத்துச்சாமி எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021 22 ஆம் ஆண்டுகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டன. இது 15 சதவீத விபத்துகள் அதிகமாகும்.

காவல்துறை இதையடுத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஏன் விபத்துகள் நடக்கிறது என்பதை கண்டறிய ஆலோசனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் ஜனவரி மாதம் 95 விபத்துகளும் பிப்ரவரி மாதம் 89 விபத்துகளும் மார்ச் மாதம் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை காண முடிகிறது.

 

ஜனவரி மாதம் 26 பேரும் பிப்ரவரி மாதம் 18 பேரும் மார்ச் மாதம் 16 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்துகள் ஏற்படவும் உயிரிழப்புகளுக்கும் அதிக காரணம் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதே.

 

விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு உபகரணங்கள் தேவை அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 485 பேரிகார்டுகளும், சாலை பாதுகாப்பு கூம்புகளும் வாங்கப்பட்டுள்ளன.
இந்த பேரிகார்டுகள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் வைக்கப்பட உள்ளது.

 

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரில் இயங்கி வந்த ஐந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தன. தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துக்கள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது இவர்கள் வழக்கு பதிவு செய்ய செய்ய மாட்டார்கள். அவர்கள் குறைந்தது போக்குவரத்து விதிகளை மீறும் 100 பேரை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலூர் மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன அந்த பகுதிகளில் காவல்துறையும் வி ஐ டி யும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அங்கு எதனால் விபத்து ஏற்படுகிறது விபத்தை எவ்வாறு தடுக்கலாம் என்பது உள்ளிட்டவை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

வேலூர் சரகத்தில் விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது உயிரிழப்புகளும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

விபத்துகள் மாலை 5 மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் இரவுஒன்பது மணி வரை பொதுமக்கள் கண்ணில் படும் படியாக சாலையில் நின்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 சதவீதம் விபத்தால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும்.

 

வெளி மாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இரவு நேரங்களில் ரோந்து வாகனங்கள் அதிகப்படுத்தி உள்ளோம் மேலும் ஆபரேஷன் ஸ்டாமிங் மூலம் ரயில்வே நிலையம் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை செய்யப்பட்டு வருகிறது கடந்த மாதங்களில் ஒப்பிடும்போது மார்ச் மாதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.

 

கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

CATEGORIES
TAGS