BREAKING NEWS

வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடியில் பொதுக்கூட்டம்!

வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடியில் பொதுக்கூட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையம் அருகில், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு மாபெரும் பொதுக்கூட்டம் வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.டீக்காராமன் தலைமை வகித்தார். எஸ்.சி./ எஸ்.டி., துறை மாநில துணைத்தலைவர் சித்தரஞ்சன் வரவேற்பு உரையாற்றினார்.

ஓ.பி.சி., பிரிவு மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவி தொடக்க உரையாற்றிட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில பொதுச் செயலாளர் வி.அருணாச்சலம் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இளங்கோவன், கணேசன், காட்பாடி 1வது மண்டல தலைவர் தொழிலதிபர் பாலகுமார், ரயில்வே கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் டிசிடியு, எ. பிரேம்குமார், தினேஷ், ஜான்பீட்டர், கிருஷ்ணகுமார், கப்பல் மணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு வாஹித் பாஷா, எல். ஆர். கே. லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ரவி நன்றியுரையாற்றிட பொதுக்கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

CATEGORIES
TAGS