வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டதில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி எம்பி பதவி பறித்ததை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசை கண்டிக்கும் விதமாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது தீ பந்தம் ஏந்தியவாறு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டமானது முன்னாள் கே.வி.குப்பம் யூனியன் கவுன்சிலர் நீலகண்டன் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய தலைவர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் சித்தரஞ்சன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
வேலூர் மாநகர தலைவர் டீக்காரராமன், மாவட்ட தலைவர் சுரேஷ், இளைஞர் அணி தலைவர் விக்ரம், மற்றும் காட்பாடி 1-வது மண்டல குழு தலைவர் பாலகுமார் நிர்வாகிகள் பழனி, ராஜி, வாசு, பரந்தாமன் மற்றும் மகளிர் மகளிர் அணி உள்பட 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.