BREAKING NEWS

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.

வேலூர் மாவட்டம்;

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எனக்கு விமானம் வாங்க உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் புதுச்சேரி முதல்வருக்கு இல்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை தேடித்தேடி மனு கொடுத்தவர்கள் தான் இன்றைக்கு ஆளுநரை விமர்சிக்கிறார்கள் – வேலூரில் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

வேலூரில் உள்ள ஸ்ரீ நாராயணி தங்க கோவில் வளாகத்தில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு விழாவும், ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்திலும் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.


பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது ஆனால் சிலர் ஆன்மிகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறிவருகிறார்கள் அது ஏற்புடையதல்ல. ஆன்மிகமும் தமிழும் ஒன்று தான்.

 

தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்வதில்லை, நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார் ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டறிருந்தேன் இதுவரையில் எனக்கு பதில் இல்லை.

கவர்னர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது அதே போல் ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை தேடி தேடி சந்தித்து புகார் கொடுத்தார்கள்.

எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும் எங்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னனாள் முதல்வர் நாராயணசாமியும் கூறிவருகிறார். அதே போல் நான் தெலுங்கான செல்லாமல் புதுவையிலேயே அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணிசாமி கூறுகிறார். இதற்க்காக உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார்.

 

இதற்க்கு கூடவா அவர் உண்டியல் குலுக்க வேண்டும். அதற்க்கான தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமானம் உள்ளது இதை கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார் என்று கூறினார்.

இந்தியாவில் கொரோனா இல்லாமல் போனதற்கு ஆன்மீகமும் அறிவியலும் தான் காரணம் என்றும் கூறினார்.

CATEGORIES
TAGS