15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு.

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா 15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா அவர்கள் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களை சந்தித்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதில் கட்சித் தொண்டர்கள் அவருக்கு சால்வை கொடுத்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர், மேலும் அதிமுகவில் ஒரே குடும்பமாய் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் பேசினார்.
மேலும் திமுக அரசு பதினைந்து மாத கால ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதாகவும் திமுகவை சார்ந்த அமைச்சர்கள் மேடைக்கு மேடை நாங்கள் 15 மாத கால ஆட்சியில் இதை செய்தோம் அதை செய்தோம் என வசனங்களை நாள்தோறும் கூறி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடு விழா செய்ததுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது எனவும் கூறினார் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் மட்டும் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
திமுகவினர் செய்யும் அராஜகங்கள் அனைத்தும் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் தினமும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை திமுக ஆட்சியில் உள்ளதாகவும் கூறினார்.
பல்வேறு போதைப் பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாகவும் மேலும் பள்ளி கல்லூரிகளில் அருகிலேயே போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாகும் குற்றம் சாட்டினார் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை, தமிழக மக்கள் திமுக ஆட்சியை தள்ளி வைக்க தயாராகி கொண்டிருப்பதாகவும் பேசினார்.
மேலும் ஆத்தூர் மக்களின் பிரதான கோரிக்கையான மேட்டூர் உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைத்து விவசாயிகள் பாசன வசதிகள் பெரும்வகையில் ராமநாயக்கன்பாளையம் கல்லாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை ஆத்தூர் பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் அரசு மகளிர் கல்லூரி அரசு பாலிடெக்னிக் அமைக்க இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதாகவும் இதை உடனடியாக இந்த திமுக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கூறினார்.
விரைவில் அதிமுக ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.