2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூ15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்; மாசர்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 ஆடுகளை திருடிய 2 பேர் கைது – ரூபாய் 15,000/- மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல்.
கடந்த 06.04.2023 அன்று இரவு மாசார்பட்டி மேலக்கரந்தை மேற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி (70) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள ஆட்டு கொட்டகையில் கட்டியிருந்த 2 ஆடுகள் திருடு போயுள்ளது.
இதுகுறித்து கருப்பசாமி நேற்று (08.04.2023) அளித்த புகாரின் பேரில் மாசாப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. விநாயகம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலக்கரந்தை பகுதியைச் சேர்ந்தவர்களான மாரியப்பன் மகன் முனிராஜ் (22) மற்றும் அழகர்சாமி மகன் முத்துசெல்வம் (21) ஆகிய இருவரும் மேற்படி கருப்பசாமியின் ஆட்டு கொட்டகையில் கட்டியிருந்த 2 ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரிகள் முனிராஜ் மற்றும் முத்துசெல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 15,000/- மதிப்புள்ள 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.