BREAKING NEWS

2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு

2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு

கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் காளப்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் உள்ளது.

 

இந்நிலையில் இவரது நிலத்தை வேறு ஒருவர் போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்து இருப்பதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது. மேலும் கதிர்வேல் பெயரில் கூட்டுபட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆக்கிரமிப்பாளர்கள் 2 ஏக்கர் நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கேட்க செல்லும் தங்களையும், போலீசாரையும் அவர்கள் மிரட்டுவதாகவும் கூறி கதிரவேல் மகன் செந்தில் கோவை மாவட்ட எஸ்.பி.பத்திரிநாராயணனிடம் மனு அளித்துள்ளார்.

 

மேலும் 100 ஆண்டுகளாக தந்தையின் பெயரில் உள்ள தங்கள் நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS