BREAKING NEWS

2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி அருகே 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து – உருளைகுடி கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உருளைகுடி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியின் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாத காலமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என அக்கிரம மக்கள் குற்றம் சாட்டினர்.மேலும் நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து கடந்த 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் குடிநீரை பயன்படுத்தினால் தொற்று பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

குடிநீர் தட்டுப்பாடு குறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கதால் இன்று கிராம மக்கள் நீர் தேக்க தொட்டி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் முறையாக சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS