2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு. சோளிங்கர் பகுதியில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து , பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்கள்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாமக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார்.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக பாமக செய்திதொடர்பாளரும் சமூக நீதிப் பேரவை மாநில தலைவருமான கே பாலு போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டார். அறிவிப்பு தொடர்ந்து சோளிங்கர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் அ.ம. கிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களுக்கு இனிப்பு கொடுக்கும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதில் நகர செயலாளர் ஜெயசீலன், நகர தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்