BREAKING NEWS

25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் பூ கொள்ளை ராணி வாய்க்கால் தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி 3 பொங்கலின் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்து தள்ளினார்.

 

 

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை இடிங்கள் என ஏற்கனவே கூறியும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கேட்காமல் வீடுகளை காலி பண்ணி விட்டு செத்துப் போங்கள் என கூறியதாக ஆதங்கம் தெரிவித்தவர்கள்.

 

 

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு விடியல் ஏற்படும் என நினைத்த தங்களுக்கு தலையில் இடி இறங்கியது போல் உள்ளது என கூறி தஞ்சை மாநகராட்சியை கண்டித்து திடீரென ஆற்றுப்பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

 

50 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களை மாற்று இடம் வழங்காமல் செத்துப் போகச் சொல்லும் இந்த மாநகராட்சி எங்களோடு சேர்த்து வீடுகளையும் இடித்து புதைத்து விட்டு என்ன வளர்ச்சியை பார்க்கப் போகிறது என கேள்வி எழுப்பினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )