நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை.

நிலக்கோட்டையில் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை பொதுமக்கள் வரவேற்பு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திண்டுக்கல் – செம்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே நிலக்கோட்டை மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மயானத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்று நிலக்கோட்டை பகுதி பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
இதனை ஏற்று தற்போது தமிழக அரசு நிலக்கோட்டை மயானத்தை நவீன மின் மயானம் அமைப்பதற்காக 1 கோடியே 55 லட்சம் நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர சுபாஷினி பிரியா கதிரேசன், நிலக்கோட்டை நகர செயலாளர் ஜோசப், பேரூராட்சி துணை தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
