4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து பிச்சம்மாள் தான் தனது பெண் குழந்தை சுடலைக்கனியுடன் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் ஏதும் செய்யாமல் ஆதரவும் இல்லாமல் இருப்பதையடுத்து தனக்கு ஆதரவற்ற விதை சான்றிதழ் வழங்க ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பிச்சம்மாள் இன்று மண்ணெண்ணெய் கேனுடன் அரசு அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்து வந்த அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.