BREAKING NEWS

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.

 

இக்கோவிலில் 74 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது பட்டொளி வீசி பறக்கின்ற மூவர்ண கொடியின் அழகினை பக்தர்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

 

தொடர்ந்து திருக்கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கோமதி கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது அதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் யானை கோமதிக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS