BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இன்று (24.03.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும்,

 

 

கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

 

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, போக்சோ நீதிமன்ற அரசு வழக்கறிஞர்  முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் திரு. முருகபெருமாள், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – II உதவி வழக்கறிஞர்  ஆலன்ராயன்,

 

திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் முருகேசன், தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவர் கரோலின் ஜெபசெல்வி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,

 

 

தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் சுரேஷ், திருச்செந்தூர்  வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம்மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன்,

 

சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பொன்னரசு, மாவட்ட குற்ற பிரிவு திரு. ஜெயராம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS