உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாக நிறுவனத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. வணிக நிறுவனத்தின் டெண்டர் உரிமைகள் பல ஆண்டுகளாக குறைந்த கட்டணத்திலேயே செயல்பட்டு வந்தது இந்நிலையில் அப்போது இருந்த நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் இது குறித்து மாறு டெண்டர் விட ஏற்பாடு செய்திருந்தார்.
இதனால் தொழில் செய்து வந்தவர்கள் அதே இடங்களை ஏலத்தில் எடுத்து தங்களது நிறுவனங்களை தக்க வைத்துக் கொண்டனர் ஒரு சிலர் புதிதாக ஏலம் எடுத்ததால் அப்போது அதில் பல மடங்கு வாடகை உயர்வு முன் தொகை உயர்வு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டண உயர்வுகள் அதிகரிக்கப்பட்டது.
இதனால் புதிதாக தொழில் தொடங்கிய வியாபாரிகள் பெருத்த நஷ்டம் அடைந்து கட்டிய பணத்தை திருப்பி வாங்க முடியாமல் அந்த பணத்தை வாடகை கழிக்கும் வரை கடைகளை காலி செய்துவிட்டனர். தற்போது நகராட்சி நிர்வாகத்திற்கு வரவேண்டிய வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது வியாபாரிகளும் மிகவும் பாதிப்படைந்து மணக்கருசத்தில் உள்ளதாலும்,
தற்போது அந்த கடைகளில் சட்டர்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுமிடாகவும் மாறி உள்ளது இதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள வியாபாரிகளின் நாளுக்காக வேண்டுமென பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள வணிக வளாத்தில் இரவு நேரங்களில் சமூகவிரோதையுடன் கூடாரமாக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.