BREAKING NEWS

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.

திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து உபரி நீர் மடுகு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாகம்.

ராணிப்பேட்டை மாவட்டம்; திமிரி ஒன்றியம் பரதராமி ஏரியிலிருந்து மோசூர் வழியாக வளையாத்தூர் ஏரிக்கு செல்லும் உபரி நீர் மடுகு கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் உபரி நீர் செல்ல வழி இல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நீர் மூழ்கி பயிர் செய்யாமல் ஒரு வருட காலமாக இருந்தது புகார் கொடுத்தும் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

 

 

தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் அனுப்பி ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டு அதிரடியாக ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் , வட்டாச்சியர், வருவாய் துறையினருக்கு விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறுகின்றனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

Share this…

CATEGORIES
TAGS