அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சண்முகசுந்தரம் ஏப்ரல் 25 ந்தேதி அன்று மாலைபூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றவர்.
நேற்று காலை ஏப்ரல் 26 ந்தேதி கல்யாண பத்திரிக்கை ஒன்றை படைப்பதற்காக வந்து கோவிலை திறந்து உள்ளே பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு செந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார் பூசாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.
CATEGORIES அரியலூர்
TAGS அரியலூர் மருதூர் கிராமம்அரியலூர் மாவட்டம்உண்டியல் உடைப்புகுற்றம்கோவில் உண்டியல் உடைப்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்