கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த இடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பு..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அருகே உள்ள போடி மெட்டு பகுதியில் தமிழக கேரளாவை இணைக்கும் பகுதியாகும் இப்பகுதியில் தமிழக மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வழிபாடு செய்வதற்காக போடி மெட்டுப்பகுதியில் விநாயகர் கோயில் திருப்பணி குழு சார்பாக விநாயகர் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்த பொழுது பூமிக்கு அடியில் சிவன் சிலை கண்டெடுத்துள்ளனர் பித்தளை கண்ணாடி சிலை மெழுகு பொம்மை போல் சுமார் ஒரு அடி நீளம் உள்ள சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவில் கட்டுவதற்காக துவங்கப்பட்ட இவ்விடத்தில் சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இறைவன் இடத்தில் கோயில் கட்ட வழி விட்டு உள்ளதாகவே நினைத்து தற்போது அப்போதியில் விநாயகர் கோவில் கட்டுவதற்கான பணியை அப்பாவது மக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.