BREAKING NEWS

தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தேனியில் ஆளும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளை கண்டித்து. தேனி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி நகர் பங்களா மேடு திடரில் அஇஅதிமுக தேனி அமைப்பு செயலாளர் ஜக்கையன் அவர்கள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததை கண்டித்தும்,

போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்தும், தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஷ சாராயம் என எழுதிய மண்பானை தலையில் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பெண்கள் ஆண்கள் என அனைவரும் கையில் பதகைகள் வைத்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் அம்மா பேரவை சுந்தர பாண்டியன் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS