75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தி, அரசு பல்துறை சார்பாக 52 பயனாளிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 17 ஆயிரத்து 435 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அதைத்தொடர்ந்து மாணவியர்கள் TMHNU மெட்ரிகுலேஷசன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
CATEGORIES தேனி