75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பேருக்கு , 75 பைசாவில் பிரியாணி வழங்கிய தஞ்சாவூர் பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் சுதந்திர தினத்தை போற்றும் வகையில், தஞ்சை இரயில் நிலையத்தில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையில் முதலில் வரும் 75 பேருக்கு, 75 பைசாவில் பிரியாணி வழங்கப்பட்டது. 50 பைசா 25 பைசா என மொத்தம் 75 பைசா கொண்டு வர வேண்டும் என் அறிவிக்கப்பட்டிருந்தது இதனால் கடை முழுவதும் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தில் அடித்து பிடித்து டோக்கன் வாங்கி மக்கள் பிரியாணியை வாங்கி சென்றனர் இதனால் கடையில் பரபரப்பாக காணப்பட்டது
CATEGORIES தஞ்சாவூர்