BREAKING NEWS

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

77-வது சுதந்திர தின கிராம சபை கூட்டம். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 77- வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் செல்வராஜ் வரவேற்றார். மகளிர் திட்ட சமூக வள்ளுநர் நவிநாயகி தீர்மானங்களை வாசித்தார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் கு.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பெரம்பூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் நலத்திட்ட பணிகள், வரவு செலவு கோப்புகள் உள்ளிட்டவை கிராம பொதுமக்கள் முன்னிலையில் விவரித்து எடுத்துக் கூறி சரிபார்க்கப்பட்டது. இதில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், கஜேந்திரன், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் அப்துல் மாலிக், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி எம் ஸ்ரீதர், செம்பனார்கோவில் ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், குத்தாலம் மகளிர் திட்ட களப்பகுதி களப்பணியாளர் ஜீவா, வருவாய் ஆய்வாளர் கண்ணதாசன், கிராம நிர்வாக அதிகாரி அம்சம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் செம்பனார்கோவில் ஒன்றியம் மேமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள் மேமாத்தூர் ஊராட்சி கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் தலைமையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய் மற்றும் அரசு அலுவலர்கள் கிராமப் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS