மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்,மாதா கோவில் தெருவில் குழந்தை தெரஸ்கோல்பிங்மகளிர் சுய உதவிக்குழுவினர் குழுவாக இணைந்து பலசரக்கு கடை நடத்தி வந்தார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்,மாதா கோவில் தெருவில் குழந்தை தெரஸ்கோல்பிங்மகளிர் சுய உதவிக்குழுவினர் குழுவாக இணைந்து பலசரக்கு கடை நடத்தி வந்தார்கள்.கடந்த கொரனா பேரிடர் காலத்தில் தொழில் மிகவும் பாதிப்படைந்து.

இவர்களுடைய தொழிலை மீண்டும் முன்னேற்ற ஏற்படுத்தும் நோக்கில் மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் வழிகாட்டுதலின் பேரில் சென்னை தேசிய கோல்பிங் இந்தியா வழியாக ரூபாய் ஒரு லட்சம் குழு கூட்டுத்தொழில்,மானிய நீதி சங்கச் செயலாளர் மற்றும் பொருளாளர் கபிரியேல் அவர்கள் தலைமையேற்று நிதி வழங்கினார்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாக அலுவலர் கணக்கர் பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.விழா வினை மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.சென்னை தேசிய கோல்பிங்இந்தியா இயக்குனர் மரியசூசை கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
