தலைப்பு செய்திகள்
தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் !

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது இதன் காரணமாக புயல் வரலாம் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது மேலும் ஒரு சில இடங்களில் மிகுந்த காற்றுடன் மழை பெய்கிறது.
மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி, சென்னை மற்றும் காட்டுப்பள்ளி போன்ற துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
