மாவட்ட செய்திகள்
ரயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவன் உடல் !

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சிங்கராஜாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தோனீஸ்வரன் இவர் தனியார் கல்லூரியில் சுகாதார சம்பந்தமாக படித்து வருகிறார்.
ஆர்எஸ் மங்காபுரம் பகுதியிலுள்ள ஒரு வேறு சாதி பெண்ணை காதலித்து வந்துள்ளார் நேற்று பொன்பாடி இரயில் நிலையத்தின் அருகில் உள்ள தண்டவாளத்தில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்து உடனடியாக அங்கு வந்த திருத்தணி காவலர்கள் உடலை மீட்டு அரக்கோணத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இவர் காதலித்து வந்த பெண் குடும்பத்தாருடன் விசாரணை நடந்து வருகிறது இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
