BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை பகுதியில் கோடை அறுவடைக்கு தயாராகும் கம்பு.

கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்திற்கு இறவையாக கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் கம்பங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
எனவே இந்த சீசனை இலக்காக வைத்து பரவலாக வீரிய ரக கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது கோடைகாலத்தில் காம்புகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )