மாவட்ட செய்திகள்
அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து தாய், பச்சிளம் குழந்தை காயம்!

விருதுநகர் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பழுதடைந்த கட்டில் உடைந்து, தாயும், பச்சிளம் குழந்தையும் காயமடைந்தனர். இதில், குழந்தைக்கு தலையில் பலமாக அடிபட்டதால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறது.
விருதுநகர் அருகே உள்ள பரங்கிரிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, மனைவி முத்துலட்சுமி. இவர் இரண்டாவது பிரசவத்துக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 24-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைபெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததால், அவர் தொடர்ந்து மகப்பேறு பிரிவிலேயே இருந்தார்.
இந்த நிலையில், நேற்று (திங்கள்) மாலையில் தாயும் குழந்தையும் மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபோது, திடீரென்று கட்டில் உடைந்துவிழுந்தது. இதில் அவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
CATEGORIES விருதுநகர்
